இந்தியாவின் சில்லறை மற்றும் சிறு வணிக கடன்கள் மோசமடையும் என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச தர நிர்ணய மதிப்பீடு நிறுவனமான மூடிஸ், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்தியாவின் கடன் தரத்தை குறைத்து, பிஏஏ2 என்ற ரேட்டிங்கில் இருந்து பிஏஏ3 ரேட்டிங் வழங்கியுள்ளது. மேலும், சில காலங்களுக்கு குறைந்த பொருளாதார வளர்ச்சி, நிதிநிலை சிக்கல், நிதி பற்றாக்குறை, நிதித்துறையில் அழுத்தம் போன்றவை உருவாகும் என்பதால், ஆட்சியாளர்கள், அமைப்புகள் புதியக் கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்துவதில் பெரும் சவாலை வரும் காலங்களில் எதிர்கொள்வார்கள் என்று மூடிஸ் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது, சில்லறை மற்றும் சிறு வணிக கடன்களின் தரமும் மோசமடையும் என்று மூடிஸ் கூறியுள்ளது.
வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் இரண்டுமே அழுத்தத்திற்கு உள்ளாகலாம் என்றும், இது வங்கிக் கடன்களில் சுமார் 10-15 சதவீதமாகும். இதே தனியார் மின் துறையின், வங்கிக் கடன்களில் சுமார் 8-10 சதவீதமாகும். அதேபோல், ஆட்டோமொபைல் துறையின் மதிப்பு சங்கிலியும், தனியார் வங்கிகளை சார்ந்து இருக்கின்றன. சில்லறை மற்றும் சிறு வணிக கடன்களின் தரமும் மொத்த கடன்களில் 44 சதவீதமாகும். இந்தியாவில் உள்ள வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் 80 சதவீதம் பிரச்சனையில் உள்ளதாகவும், அவற்றின் தரத்தினை பரிசீலனை செய்து வருவதாகவும் மூடிஸ் தெரிவித்துள்ளது.